65. அருள்மிகு நீரகத்தான் கோயில்
மூலவர் நீரகத்தான், ஜகதீஸ்வரர்
தாயார் நிலமங்கைவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் அக்ரூர தீர்த்தம்
விமானம் ஐகதீஸ்வர விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருநீரகம், தமிழ்நாடு
வழிகாட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிர்த்தெருவில் சுமார் அரை கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Ulagalandar Gopuram Tiruneeragam Moolavarமூலவர் நீரகத்தான், ஜகதீஸ்வரப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு நிலமங்கைவல்லி என்னும் திருநாமம். தாயார் சன்னதி இல்லை. அக்ரூரருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com